வந்தவாசி பஸ் நிலையத்தில் பரபரப்பு டிரான்ஸ்பார்மரில் திடீர் தீ பயணிகள் அலறியடித்து ஓட்டம்

வந்தவாசி, ஜூன் 7: வந்தவாசி பழைய பஸ் நிலையத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரில் திடீரென தீப்பிடித்து எரிந்ததால், பயணிகள் அலறியடித்து ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பழைய பஸ் நிலையத்தில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. இந்த டிரான்ஸ்பார்மர் மூலமாக பஜார் வீதியில் உள்ள முக்கிய கடைகளுக்கு மின் சப்ளை செய்யப்படுகிறது. அதிக திறன் கொண்ட இந்த டிரான்ஸ்பார்மரில் நேற்று மாலை திடீரென தீ பிடித்தது. அப்போது பஸ் நிலையத்தில் பஸ்சிற்காக காத்துக்கொண்டிருந்த பயணிகள் டிரான்ஸ்பார்மர் வெடித்துவிடுமோ என்ற அச்சத்தில் அலறியடித்து கொண்டு ஓடினர். தகவலறிந்த மின்வாரிய துறையினர் உடனடியாக அப்பகுதியில் மின்சாரத்தை துண்டித்தனர். மேலும் செய்யாறு, ஆற்காடு, வேலூர், மேல்மருத்வத்தூர் செல்லக்கூடிய பேருந்துகளும் ஒன்றன்பின் ஒன்றாக அங்கு கொண்டு செல்லப்பட்டு, அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும், தீயணைப்பு துறையினர், விரைந்து வந்து தீயை அனைத்து பெரும் விபத்து நடக்க இருந்ததை தடுத்தனர். மேலும் தீ அருகில் உள்ள கடைகளுக்கு பரவாமல் தடுத்து நடவடிக்கை மேற்கொண்டனர். தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பஸ் நிலையத்தில் உள்ள டிரான்ஸ்பார்மர் தீ பிடித்து பயணிகள் அலறியடித்து ஓடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post வந்தவாசி பஸ் நிலையத்தில் பரபரப்பு டிரான்ஸ்பார்மரில் திடீர் தீ பயணிகள் அலறியடித்து ஓட்டம் appeared first on Dinakaran.

Related Stories: