ஆட்டுச்சந்தை சுங்க வசூல் ₹4.25 லட்சத்திற்கு ஏலம்

சேந்தமங்கலம், ஜூன் 7: எருமப்பட்டி ஒன்றியம், பவித்திரம் ஊராட்சியில், பிரசித்தி பெற்ற வாரச்சந்தை உள்ளது. வாரத்தில் முதல் நாளான திங்கள்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். பல்வேறு பகுதியில் இருந்தும் விவசாயிகள் வளர்க்கும் ஆடுகள், தோட்டத்தில் பயிரிடப்பட்ட காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இந்த சந்தையில் கூடும் ஆட்டுச் சந்தை மிகவும் புகழ் பெற்றது. பல்வேறு பகுதியில் இருந்து ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். வெளிமாநிலங்களில் இருந்து ஆடுகளை வாங்க வியாபாரிகள் வந்தனர். குறைந்த விலையில் ஆடுகள் கிடைப்பதால், அதனை வாங்க உள் மாவட்ட வியாபாரிகளும் வருகின்றனர். இதே போல, 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மளிகை, காய்கறிகளை இந்த சந்தையில் வந்து வாங்கி சென்றனர். ஆண்டுதோறும் சந்தை சுங்க வசூல் ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் ஏலம் விடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ₹4.25 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.

The post ஆட்டுச்சந்தை சுங்க வசூல் ₹4.25 லட்சத்திற்கு ஏலம் appeared first on Dinakaran.

Related Stories: