ஆனால் தம்பதி அறிவித்தபடி திருப்பி கொடுக்கவில்லை. மேலும் தம்பதி செல்போனை ‘சுவிட்ச் ஆப்’ செய்து விட்டனர். இது குறித்து, முதலீடு செய்த கோவை பன்னிமடை பாரதி நகரை சேர்ந்த ரமா (30) கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இதில், இந்த தம்பதி 44 பேரிடம் ரூ.41 லட்சத்து 88 ஆயிரம் மோசடி செய்தது தெரியவந்தது. இந்நிலையில் கோவை விளாங்குறிச்சி பகுதியில் பதுங்கி இருந்த ரமேஷ், அவரது மனைவி ஹேமா என்கிற ஹேமலதா, இவர்களுக்கு உதவிய தென்காசி மாவட்டத்தை சேர்ந்த அருணாச்சலம் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 45 பவுன் நகைகள், 1.5 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.10,250, ஸ்கூட்டர், டிஜிட்டல் கேமரா, 7 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
குடும்ப பெண்களை குறிவைத்தே இந்த மோசடி அரங்கேறியுள்ளது. அவர்கள் முதலீடு பணத்தை நேரில் வாங்காமல் ஆன்லைன் பரிவர்த்தனை மூலமாகவே பெற்றுள்ளனர். சிறிய தொகையாக இருக்கும்போது அதற்கான லாபத்தை கொடுத்துள்ளனர். தொடர்ந்து அவர்களை ஆசை வலையில் வீழ்த்தி பெரிய தொகையை முதலீடு செய்ய வைத்து ஏமாற்றி உள்ளனர். கொரோனா காலத்தில் பல பெண்கள் பணத்தை இழந்தனர். தமிழ்நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிக்கலாம் என்று தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாநகர போலீசில் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ரூ.1200 முதலீடு செய்தால் 20 நாளில் ரூ.1500 தரப்படும் யூடியூப் சேனல் மூலம் வலைவிரித்து ரூ.41.88 லட்சம் மோசடி-தம்பதி கைது: 45 பவுன் நகை, 1.5 கிலோ வெள்ளி பறிமுதல் appeared first on Dinakaran.