இவர் மீது கொடுங்கையூர், எம்கேபி நகர், வியாசர்பாடி, ஓட்டேரி, புளியந்தோப்பு உள்ளிட்ட பல காவல் நிலையங்களில் 10க்கும் மேற்பட்ட கொலை, 10-க்கும் மேற்பட்ட கொலை முயற்சி வழக்கு, வெடிகுண்டு வீசுதல் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஜனா கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் ஜாமினில் வந்து தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில்தான் அவர் திருப்பூரில் வசித்து வந்தது தெரிய வந்தது.
போலீசாரிடம் இருந்து தப்பிக்க சென்னையில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காங்கயம் பகுதியில் தலைமறைவாகியுள்ளார். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் வீடு கட்டி குடியேற முடிவு செய்துள்ளார். ஆனார் அதற்குள் போலீசாரின் சந்தேகப்பார்வையில் சிக்கி கைதாகியுள்ளார். ரவுடி ஜனாவை காங்கயம் போலீசார் சென்னை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
The post காங்கயம் அருகே கொலை வழக்கில் தொடர்புடைய சென்னையை சேர்ந்த பிரபல ரவுடி கைது: ₹1 கோடியில் வீடு கட்டியதால் சிக்கினார் appeared first on Dinakaran.