(தி.மலை) குறைதீர்வு கூட்டத்தில் 49 மனுக்களுக்கு உடனடி தீர்வு காண உத்தரவு ஆரணி ஆர்டிஓ அலுவலகத்தில் நடந்த

ஆரணி, ஜூன் 6: ஆரணி ஆர்டிஓ அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் 49 மனுக்களுக்கு உடனடி தீர்வு காண ஆர்டிஓ உத்தரவிட்டார். ஆரணி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட ஆரணி, போளூர், ஜமுனாமரத்தூர், கலசபாக்கம் ஆகிய 4 தாலுகாக்களுக்கு மக்கள் குறைத்தீர்வு கூட்டம் ஆரணி ஆர்டிஓ அலுவலகத்தில் நேற்று நடந்தது. மேலும், ஆர்டிஓ தனலட்சுமி தலைமையில் நடந்த குறைத்தீர்வு கூட்டத்தில் நேர்முக உதவியாளர் குமாரவேலு மற்றும் அனைத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். தொடர்ந்து, ஆர்டிஓ தனலட்சுமி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். பின்னர், பட்டா, பட்டா ரத்து, வீட்டுமனை பட்டா, தமிழ்நில திருத்தம், பட்டா பெயர் மாற்றம், புல எண் திருத்தம், ஆதரவற்ற விதவை சான்று, நிலஅளவ, சாதிசான்று, கணினி சிட்ட திருத்தம், கிராம உதவியாளர் பணி நியமனம் ரத்து, மண்ணெண்ணெய் வழங்க கோரி, சர்வே எண் திருத்தம், போலிப்பாட்டா ரத்து, ஆக்கிரமிப்பு, சிமெண்ட் சாலை மற்றும் கால்வாய் அமைத்தல், அடிப்படை வசதி, வேலைவாய்ப்பு கோரி, பயிர் நிவாரணத் தொகை வழங்க கோரி என மொத்தம் 49 கோரிக்கை மனுக்களை பொதுமக்களிடமிருந்து ஆர்டிஓ தனலட்சுமி பெற்று சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள உடனடி தீர்வு மேற்கொள்ள உத்தரவிட்டார். இதில், அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post (தி.மலை) குறைதீர்வு கூட்டத்தில் 49 மனுக்களுக்கு உடனடி தீர்வு காண உத்தரவு ஆரணி ஆர்டிஓ அலுவலகத்தில் நடந்த appeared first on Dinakaran.

Related Stories: