இந்த நிலையில், அந்த பாலத்தின் 2 பகுதிகளில் நேற்று மாலை 6 மணி அளவில் 2வது முறையாக திடீரென ஆற்றில் உடைந்து விழுந்தன. ஆற்றுப்பாலம் சீட்டுக் கட்டு போல சரிந்து விழும் காட்சிகளை கங்கை கரையோரம் நின்று கொண்டு இருந்தவர்கள் தங்கள் செல்போன்களில் படம் பிடித்தனர். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த முதலமைச்சர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். கட்டுமானத்தின் தரம் குறித்து பொறியாளர்களின் அறிக்கை கிடைத்தவுடன் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பாலம் இடிந்து விழுந்ததற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் நிதிஷ் குமாரும், துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவும் பதவி விலக வேண்டும் என பாஜக வலியுறுத்தி உள்ளது.
The post கங்கை நதியின் மீது கட்டப்பட்டு வந்த புதிய பாலம் 2ம் முறையாக இடிந்து விழுந்தது : விசாரணைக்கு உத்தரவிட்டார் பீகார் முதல்வர்!! appeared first on Dinakaran.