தெலங்கானாவில் ரூ.12,000 கோடிக்கு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்

ஐதராபாத்: விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க தெலங்கானா அரசு ஆண்டுக்கு ரூ.12,000 கோடி செலவிடுவதாக முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தெரிவித்தார். நிர்மல் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சியர் வளாகத்தை திறந்து வைத்து பேசிய அவர், “விவசாய சமூகத்தை வலுப்படுத்தவும், விவசாயிகளின் முகத்தில் புன்னகையை காணவும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க அரசு ஆண்டுக்கு ரூ.12,000 கோடி செலவு செய்கிறது. தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு உணவு பதப்படுத்தும் தொழிலை முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்ற கவனம் செலுத்தப்படும்” என்று கூறினார்.

The post தெலங்கானாவில் ரூ.12,000 கோடிக்கு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் appeared first on Dinakaran.

Related Stories: