இந்த நிலையில், அந்த சிறுவனை சென்னை கெல்லீசில் உள்ள சிறுவர் காப்பகத்துக்கு மாற்ற எண்ணூர் போலீசார் முடிவு செய்து போலீசார் 2 பேர், திருவள்ளூர் சீர்திருத்தப் பள்ளிக்கு சென்றனர். அங்கு முறையான ஆவணங்களை சமர்ப்பித்து சிறுவனை அழைத்துக்கொண்டு மின்சார ரயிலில் சென்னைக்கு வந்தனர். சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து இறங்கியபோது திடீரென்று அந்த சிறுவன் போலீசாரின் பிடியில் இருந்து தப்பிவிட்டான். இதையடுத்து போலீசார் தீவிரமாக தேடிவந்த நிலையில், பொன்னேரியில் உள்ள பாட்டி வீட்டில் பதுங்கியிருந்த சிறுவனை போலீசார் மீட்டு கெல்லீசில் உள்ள சிறுவர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
The post போலீசாரின் பிடியில் இருந்து தப்பியோடிய சிறுவன் கைது: கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவன் appeared first on Dinakaran.