மணிப்பூர்: மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட மக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இம்பால்-திமாபூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தடுப்புகளை அகற்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார். தடுப்புகளை அகற்றினால் தான் காய்கறிகள், மருந்துகள், பெட்ரோல், டீசல் மக்களுக்கு சென்றடையும் என்று அமித்ஷா கூறியுள்ளார். அனைவரும் ஒன்றிணைந்தால் தான் மாநிலத்தில் மீண்டும் அமைதியை நிலைநாட்ட முடியும்.
The post மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட மக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்: உள்துறை அமைச்சர் அமித்ஷா டிவிட் appeared first on Dinakaran.