இதுபற்றி நிபுணர் கள்கூறியதாவது: உலகிலேயே 4வது மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்கை இந்தியா கொண்டுள்ளது. இந்தியாவில் நாள்தோறும் 1.3 கோடி பேர் ரயிலில் பயணிக்கின்றனர். 150 கோடி டன் சரக்குகள் ரயில்களில் எடுத்து செல்லப்படுகின்றன. இப்படிப்பட்ட நிலையில், ரயில்வேயை வருமானம் ஈட்டும் தொழிலாக மட்டுமே அரசு பார்க்கிறது. ரயில்வே நவீனப்படுத்துவம் போது பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பதை ஒடிசா ரயில் விபத்து காட்டி உள்ளது.
கடந்த 2017-18ம் நிதியாண்டு பட்ஜெட்டில் ரயில்வேயின் பாதுகாப்பிற்காக ரூ.1 லட்சம் கோடிக்கு 5 ஆண்டு நிதித் தொகுப்பு உருவாக்கப்பட்டது. ஆனால் இந்த நிதியை ரயில்வே அமைச்சகம் பயன்படுத்தாமல், 2028 வரை நீட்டித்துள்ளது. அப்படியானால், பாதுகாப்பான ரயில் பயணத்திற்கு மக்கள் இன்னும் 5 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டுமா? நவீனத்துவத்தை போலவே பாதுகாப்பிலும் அக்கறை காட்ட வேண்டும்.
The post ரயில் பட்ஜெட் பொதுபட்ஜெட்டுடன் இணைத்துவிட்டது சாலைகள் அமைக்க அதிகநிதி ரயில் பாதுகாப்பில் அலட்சியம்: நிபுணர்கள் கருத்து appeared first on Dinakaran.