ரயில்வேயை பா.ஜ அரசு அழித்துவிட்டது:லாலு

ஒடிசா ரயில்விபத்து குறித்து முன்னாள் ஒன்றிய ரயில்வே அமைச்சரும், பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் கூறியதாவது:
ஒன்றிய பாஜ அரசு ரயில்வேயை அழித்துவிட்டது. ஒடிசா ரயில்விபத்திற்கு அலட்சியமே காரணம். இந்த ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இந்த விபத்துக்கு ஒன்றிய அரசு பொறுப்பேற்க வேண்டும். ஒன்றிய அரசு இந்திய ரயில்வேயை முற்றிலுமாக அழித்துவிட்டது. பயணிகளின் பாதுகாப்பு பற்றி அவர்கள் சிறிதும் கவலைப்படவில்லை. இது ரயில்வே அதிகாரிகளின் அலட்சியம். ஒரே நேரத்தில் 3 ரயில்கள் மோதியது, நாட்டின் மிக மோசமான ரயில்வே சோகங்களில் ஒன்றாகும். இவ்வாறு அவர் கூறினார்.

The post ரயில்வேயை பா.ஜ அரசு அழித்துவிட்டது:லாலு appeared first on Dinakaran.

Related Stories: