விபத்தில் சிக்கியவர்களுக்கு தேவையான உதவிகள் செய்ய சிறப்பு ஏற்பாடு: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் பேட்டி

சென்னை: சென்னை எழிலகத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது: ஒடிசா ரயில் விபத்தை பற்றி அறிந்தவுடன், முதல்வர் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று அனைத்து மீட்பு பணிகளை முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். அமைச்சர்கள் உதயநிதி, சிவசங்கர் மற்றும் அரசு உயரதிகாரிகள் என ஒரு குழுவினர் ஒடிசாவிற்கு சென்றுள்ளனர். தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பதை கண்டறிய உத்தரவிடப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கியவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்ய தயார் நிலையில் உள்ளோம். குறிப்பாக, விபத்தில் காயமடைந்தவர்களை மற்றும் இறந்தவர்களை தமிழ்நாட்டிற்கு கொண்டு வர ஏற்பாடுகள் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post விபத்தில் சிக்கியவர்களுக்கு தேவையான உதவிகள் செய்ய சிறப்பு ஏற்பாடு: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: