அந்த நேரத்தில் விபத்தில் படுகாயம் அடைந்த தமிழ் மக்களுக்கு உயர்தர மருத்துவ வசதிகள் செய்து கொடுப்பதாகவும், அவர்கள் உடல் நலத்தில் சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்றும் உறுதி அளித்தார். அதே போல் படுகாயம் அடைந்தவர்கள் மற்றும் பலியானவர்களின் உறவினர்கள் ஒடிசா வந்தால் அவர்களுக்கும் தேவைப்படும் உதவி ஒடிசா அரசு சார்பில் வழங்கப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு குழுவிடம் அவர் தெரிவித்தார். அதை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒடிசா முதல்வர் நவீன்பட்நாயக்குடன் பேசினார்.
அப்போது விபத்து மீட்பு நடவடிக்கை குறித்தும், காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஒடிசா அரசு எடுத்த நடவடிக்கையும் பாராட்டிய அவர், தமிழ்நாடு அரசு சார்பில் ஒடிசா முதல்வருக்கு நன்றி தெரிவித்தார். மேலும் தமிழ்நாடு அரசு சார்பில் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்ய தயார் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அப்போது தொலைபேசியில் உறுதி அளித்தார். இதையடுத்து ஒடிசா முதல்வருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான குழுவினர் நன்றி தெரிவித்து கொண்டனர். இந்த சந்திப்பின் போது ஒடிசா முதல்வரின் தனிச்செயலாளரும், மதுரையை சேர்ந்தவருமான வி.கே. பாண்டியன் மற்றும் தமிழ்நாடு அரசு மூத்த அதிகாரிகள் பணிந்திரரெட்டி, குமார் ஜெயந்த், அர்ச்சனா பட்நாயக் ஆகியோர் உடன் இருந்தனர்.
The post தமிழ்நாடு பயணிகள் மீட்பு குறித்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்குடன் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை appeared first on Dinakaran.