இந்நிலையில் முன்னாள் ரயில்வே துறை அமைச்சரும், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலுபிரசாத் யாதவ் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர்; மிக பெரிய அலட்சியத்தால்தான் கோர ரயில் விபத்து நிகழ்ந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். ரயில் விபத்தில் ஏராளமானோர் பலியானதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை. பெரிய அலட்சியம் இருந்தது; ரயில்வே துறையை சீரழித்துவிட்டார்கள். உயர்மட்ட விசாரணை நடத்தி, விபத்துக்கு காரணமானவர்கள் மீது நவடிக்கை எடுக்க வேண்டும். என்று லாலுபிரசாத் யாதவ் கூறினார்.
The post ஒடிசா ரயில் விபத்து: பெரிய அலட்சியம் இருந்தது; ரயில்வே துறையை சீரழித்துவிட்டார்கள்: லாலுபிரசாத் யாதவ் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.