தலித்துகள், முஸ்லிம்களின் நிலை குறித்து ராகுல் கூறியது உண்மை தான்: மாயாவதி ஒப்புதல்

லக்னோ: நாட்டில் தலித்துகள் மற்றும் முஸ்லிம்களின் மோசமான நிலை குறித்து ராகுல் காந்தி கூறியது கசப்பான உண்மை என்று மாயாவதி தெரிவித்தார். அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி இந்தியாவில் தலித் மற்றும் முஸ்லீம்கள் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்று தெரிவித்தார். இதுபற்றி உபி முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் தலைவருமான மாயாவதி டிவிட்டரில் தெரிவித்து இருப்பதாவது;

இந்தியாவில் கோடிக்கணக்கான தலித்துகள், முஸ்லிம்களின் பரிதாபகரமான நிலை குறித்தும், அவர்களின் வாழ்க்கை, மத பாதுகாப்பின்மை குறித்தும் ராகுல்காந்தி தெரிவித்தது கசப்பான உண்மை தான். இதற்கு ஒன்றியத்தில் ஆட்சி கட்டிலில் இருந்த காங்கிரஸ், பாஜ மற்றும் பிற அரசுகள் தான் முழுப்பொறுப்பு. ஏழைகள், தாழ்த்தப்பட்ட பிரிவினரிடம், பெரும்பான்மை பிரிவை சேர்ந்தவர்கள் சுரண்டுவது பொதுவான விஷயம். இதனுடன் அரசியல், தேர்தல் சுயநலத்திற்காக எண்ணற்ற வகுப்புவாத கலவரங்கள், சாதிவெறி மோதல்கள் எனும் கருப்பு அத்தியாயங்களால் வரலாறு நிரம்பியுள்ளது. இவ்வாறு அவர் டிவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

The post தலித்துகள், முஸ்லிம்களின் நிலை குறித்து ராகுல் கூறியது உண்மை தான்: மாயாவதி ஒப்புதல் appeared first on Dinakaran.

Related Stories: