காங்கிரஸ் முதுபெரும் தலைவர் தசரதன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

சென்னை: காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவர் தசரதன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலுவின் மாமனாரும், காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவருமான கே.தசரதன் மறைவுற்ற செய்தி அறிந்து வருந்தினேன்.

அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் காங்கிரஸ் பேரியக்கத்தை சேர்ந்த தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post காங்கிரஸ் முதுபெரும் தலைவர் தசரதன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்! appeared first on Dinakaran.

Related Stories: