தேச துரோக சட்டப்பிரிவு 124 ஏ-வை தொடர 22-வது சட்ட ஆணையம் பரிந்துரை..!!

டெல்லி: தேச துரோக சட்டப்பிரிவு 124 ஏ-வை தொடர 22-வது சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. 124-ஏ சட்டப்பிரிவின் கீழ் தற்போது 3 ஆண்டுகள் சிறை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. 7 ஆண்டு சிறை தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் மாற்றம் செய்து தற்போது பரிந்துரை செய்துள்ளது. எத்தகைய செயல்களின் கீழ் தேச துரோக சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின் 124-ஏ சட்டப்பிரிவு, தற்போதைய நடைமுறைக்கு பொருந்தாது எனக் கூறி வழக்கு தொடரப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தேச துரோக சட்டத்தை மறுபரிசீலனை செய்ய விரும்புவதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

The post தேச துரோக சட்டப்பிரிவு 124 ஏ-வை தொடர 22-வது சட்ட ஆணையம் பரிந்துரை..!! appeared first on Dinakaran.

Related Stories: