இந்த விவகாரம் தொடர்பாக டி.கே.சிவகுமார் கூறியதாவது: மேகதாதுவில் அணை கட்டும் திட்டம் செயல்படுத்த வேண்டும் என்பது பல ஆண்டுகளாக கனவு திட்டமாகும். மழைகாலத்தில் கர்நாடக அணைகள் தவிர தமிழ்நாட்டில் உள்ள மேட்டூர் மற்றும் கல்லணை ஆகிய அணைகள் நிரம்பி, வீணாக பல நூறு டிஎம்சி தண்ணீர் கடலில் கலக்கிறது. மேகதாதுவில் அணை கட்டுவதின் மூலம் 50 டிஎம்சிக்கும் அதிகம் தண்ணீர் சேமித்து வைத்தால், அணைகளின் நீர் பற்றாக்குறை நிலவும் சமயத்தில் இரு மாநிலங்களும் பயன்படுத்தி கொள்ள முடியும். பல ஆண்டுகளாக இந்த திட்டத்திற்காக இரு மாநிலங்களும் சண்டையிட்டது போதும். தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படும் எண்ணம் எங்களுக்கு கிடையாது.
மேகதாது அணையில் தேக்கி வைக்கப்படும் நீர் தமிழ்நாடு விவசாயிகளுக்கும் பயன்தரும். தமிழ்நாடு அரசின் எதிர்ப்பு நியாயமானதாக இருந்தாலும் அணை கட்டுவதின் மூலம் ஏற்படும் சாதக-பாதகம் குறித்து இரு மாநில அரசுகள் அமர்ந்து முழுமையாக அலசி ஆராய்ந்தால் மட்டுமே உண்மை தெரியும். இந்த விஷயத்தில் சகோதர பாசத்துடன் பேசி தீர்வு காண முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
The post மேகதாது விவகாரத்தை சகோதர பாசத்துடன் பேசி தீர்க்க வேண்டும்: டி.கே.சிவகுமார் அழைப்பு appeared first on Dinakaran.