திமுக சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நகரமன்ற தலைவர் தொடங்கி வைத்தார் ஆரணியில், கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு

ஆரணி, ஜூன் 2: ஆரணியில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பில் ஆரணி டவுன் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நேற்று நடந்தது. இம்முகாமிற்கு, நகராட்சி ஆணையாளர் தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். திமுக மாவட்ட பொருளாளர் தட்சணாமூர்த்தி, ஒன்றிய செயலாளர் சுந்தர், நகர பொருளாளர் பாலமுருகன், ஒன்றிய கவுன்சிலர் ரஞ்சித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி கலந்து கொண்டு இலவச கண் சிகிச்சை முகாமை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். அப்போது, கண் சிகிச்சை முகாமில் கண் பார்வை குறைபாடுகள், கண்ணில் நீர் வடிதல், கண்ணீர் உரை நீக்குதல், கிட்ட பார்வை, தூரப்பார்வை, கண் வலி உள்ளிட்ட கண் குறைபாடு உள்ளவர்கள் என 400-க்கு மேற்பட்ட நபர்களுக்கு மருத்துவ குழுவினர் முகாமில் பரிசோதனை செய்து, மருத்துவ ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கினார். தொடர்ந்து, 27 பேருக்கு விழி லென்ஸ் பொருத்த தேர்வு செய்யப்பட்டு, தனியார் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். மேலும், முகாமில் ஆரணி டவுன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கண்சிகிச்சை பரிசோதனை செய்து கொண்டனர்.

The post திமுக சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நகரமன்ற தலைவர் தொடங்கி வைத்தார் ஆரணியில், கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு appeared first on Dinakaran.

Related Stories: