அதே போல், பீகாரின் பத்னாகா மற்றும் நேபாள் கஸ்டம் யார்டு வரையிலான சரக்கு ரயில் போக்குவரத்து சேவையை இருநாட்டு தலைவர்களும் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். பின்னர் பேசிய பிரதமர் மோடி, “இந்தியா-நேபாளம் இடையே போக்குவரத்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இரு நாடுகளிடையே நீண்ட கால மின் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான மதம் மற்றும் கலாச்சார உறவுகள் மிகவும் பழமையானது, வலுவானது. இந்த உறவுகளை இமாலய உச்சிக்கு கொண்டு செல்ல இருதரப்பு அரசுகளும் பாடுபடும். இதே ஆர்வத்துடன், எல்லை பிரச்சனை உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்படும். இதற்காக பல்வேறு திட்டங்களை விரைந்து செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது,” என்று கூறினார்.
The post இந்தியா-நேபாளம் இடையே எல்லை பிரச்னைக்கு தீர்வு காணப்படும்: பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.