கடந்த ஆண்டில் மாநில சட்டபேரவைகள் சராசரியாக 21 நாள் கூடின: ஆய்வில் தகவல்

புதுடெல்லி: கடந்த ஆண்டில் மாநில சட்டபேரவைகளின் கூட்டம் சராசரியாக 21 நாட்கள் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. சட்டபேரவைகளின் செயல்பாடுகள் குறித்து பிஆர்எஸ் என்னும் அமைப்பு ஆய்வு நடத்தி வருகிறது. இந்த அமைப்பு ஒரு ஆண்டில் எத்தனை முறை மாநில சட்டபேரவைகள் கூட்டம் கூடியது என்பது குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில்,கடந்த ஆண்டில் 22 சட்ட பேரவைகளின் அமர்வு சராசரியாக 21 நாட்கள் நடந்துள்ளன. இதில், கர்நாடக பேரவை அதிகபட்சமாக 45 நாட்களும், மேற்கு வங்கம் 42 நாட்களும், கேரளா 41 நாட்களும் கூடியுள்ளன. பெரும்பாலான சட்ட பேரவைகளுக்கு ஒரு ஆண்டில் 2 அல்லது 3 அமர்வுகள் வரை நடக்கிறது.

ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை நடக்கும் பட்ஜெட் கூட்ட தொடர் அதிக நாட்கள் நடக்கிறது. மழைக்காலம் மற்றும் குளிர்கால கூட்ட தொடர்கள் குறைந்த நாட்களே நடக்கிறது. கடந்த ஆண்டில் 12 சட்ட பேரவைகளின் கூட்டம் 2 அமர்வுகள் மட்டுமே நடந்துள்ளது. பட்ஜெட் கூட்டதொடரில்தான் 61 சதவீத கூட்டங்கள் நடந்துள்ளன. குஜராத், ராஜஸ்தான் பேரவையின் 80 சதவீத அமர்வுகள் பட்ஜெட் தொடரில் நடந்துள்ளன. 20 மாநிலங்களில் நடந்த அமர்வுகளின் சராசரி நேரம் 5மணி நேரம் ஆகும்.

மகாராஷ்டிராவில் ஒரு அமர்வு 8 மணி நேரம் நீடித்தது. சிக்கிமில் குறைந்த அளவாக 2 மணி நேரம் நடந்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை பேரவைகளின் கூட்டம் சராசரியாக 25 நாள் நடந்துள்ளன. கேரளாவில் அதிகபட்சமாக 48 நாட்களும் அதற்கு அடுத்தாற்போல் ஒடிசா(41 நாட்கள்), கர்நாடகாவில் (35 நாட்கள்) நடந்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கடந்த ஆண்டில் மாநில சட்டபேரவைகள் சராசரியாக 21 நாள் கூடின: ஆய்வில் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: