எம்பி, எம்எல்ஏ பங்கேற்பு கலைஞரின் பிறந்தநாளில் ஏழைகளுக்கு அன்னதானம்: திமுக செயல்வீரர்கள் கூட்டம்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய திமுக சார்பில், செயல்வீரர்கள் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. ஒன்றியச்செயலாளர் படுநெல்லி பாபு தலைமை தாங்கினார். ஒன்றிய அவைத்தலைவர் பழனி முன்னிலை வகித்தார். இதில், காஞ்சிபுரம் எம்பி செல்வம், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் ஆகியோர் கலந்துகொண்டு, கலைஞரின் நூற்றாண்டு விழா, புதிய உறுப்பினர்கள் சேர்கை உள்ளிட்டவை குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர். அப்போது, திமுகவில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணியினை விரைந்து முடிக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதனையடுத்து, முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவில், ஒவ்வொரு கிளை மற்றும் வார்டுகளில் கழகக்கொடி ஏற்றி, ஏழை-எளிய மக்கள் மற்றும் மகளிர்கள் பயன்பெறும் வகையில், நலதிட்ட உதவிகள், வேலை வாய்ப்பு முகாம்கள், கட்சியின் முன்னோடிகளுக்கு பொற்கிழி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள், அன்னதானம் வழங்குதல் மற்றும் மருத்துவமுகாம்கள் நடத்தி, கலைஞரின் பிறந்தநாளை கொண்டாடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன், ஒன்றிய துணை செயலாளர்கள், ஒன்றிய மற்றும் கிளை கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post எம்பி, எம்எல்ஏ பங்கேற்பு கலைஞரின் பிறந்தநாளில் ஏழைகளுக்கு அன்னதானம்: திமுக செயல்வீரர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: