முன்னாள் கிரிக்கெட் வீரர் லட்சுமன் சிவராமகிருஷ்ணனுக்கு தமிழக பாஜவில் புதிய பதவி

சென்னை: தமிழகத்தை சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் லட்சுமன் சிவராமகிருஷ்ணன். இவர் 1983ம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமானார். தொடர்ந்து அவர் 1987ம் ஆண்டு இந்தியாவிற்காக தனது இறுதிப்போட்டியில் விளையாடி ஓய்வு பெற்றார். இதையடுத்து 2000ம் ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட் வர்ணனையாளராக பணியாற்றி வந்தார் லட்சுமன் சிவராமகிருஷ்ணன். 2017ம் ஆண்டு முதல் தமிழ் வர்ணனையும் செய்து வந்தார்.

இந்தநிலையில் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் அப்போதைய தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் முன்னிலையில் அவர் பாஜவில் இணைந்தார். இந்த நிலையில் அவருக்கு தமிழக பாஜக விளையாட்டு திறன் மேம்பாட்டு பிரிவு துணை தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக பாஜக விளையாட்டு திறன் மேம்பாட்டு பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி இன்று அறிவித்துள்ளார்.

The post முன்னாள் கிரிக்கெட் வீரர் லட்சுமன் சிவராமகிருஷ்ணனுக்கு தமிழக பாஜவில் புதிய பதவி appeared first on Dinakaran.

Related Stories: