வன்முறை தொடர்பாக விசாரணை குழு அமைப்பு: அமித்ஷா

மணிப்பூர்: மணிப்பூர் வன்முறை தொடர்பாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். கடந்த ஒருமாதத்தில் வன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அமித் ஷா ஆறுதல் தெரிவித்தார். மணிப்பூர் வன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் மாநில அரசு சார்பில் வழங்கப்படும், ஒன்றிய அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். வன்முறையில் காயமடைந்தவர்களுக்கு நாளை நிவாரணம் அறிவிக்கப்படும். மணிப்பூர் வன்முறையில் சுமார் 70 பேர் உயிரிழந்துள்ளனர்.

The post வன்முறை தொடர்பாக விசாரணை குழு அமைப்பு: அமித்ஷா appeared first on Dinakaran.

Related Stories: