(தி.மலை)திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் போளூர் நகர

போளூர், ஜூன் 1: போளூர் நகர திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. மாவட்ட அவை தலைவர் அ.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மத்திய ஒன்றிய செயலாளர் அ.சுப்ரமணியன், மாவட்ட இளஞைரணி அமைப்பாளர் என்.நரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் கோ.தனசேகரன் வரவேற்றார். கூட்டத்தில் மறைந்த திமுக தலைவர் கலைஞர் 100வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். அதன்படி, அமைச்சர் எ.வ.வேலு ,வடக்கு மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் ஆகியோர் போளூர் தொகுதி சிறப்பாக கொண்டாடப்பட்டது என முதன்மை பெற வேண்டும் என தெரிவித்துள்ளனர். எனவே, போளூர் நகர திமுக சார்பில் 18 வார்டுகளிலும் கொடியேற்றி, அன்னதானம் வழங்க வேண்டும். ஏழை எளிய மக்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்க வேண்டும். தமிழகத்தின் முதல்வராக இருந்த போது கலைஞர் பல நல்ல திட்டங்களை செய்துள்ளார். அவரின் 100வது பிறந்த நாள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என ஆலோசிக்கப்பட்டது. இதில் பொதுக்குழு உறுப்பினர் ஏ.எம்.காசி, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் என்.கே.பாபு, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கே.வி.ஆர்.சுரேஷ்பாபு, தொழிலதிபர்கள் அ.மணிகண்டன், ப.சங்கர், மாவட்ட பிரதிநிதி க.சையத்அப்ரோஸ், பேருராட்சி உறுப்பினர்கள் சி.ராம்மோகன், மு.பார்த்தீபன், கு.ரங்கதுரை, ஏ.சாந்திஏழுமலை, ஜெ.பழனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post (தி.மலை)திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் போளூர் நகர appeared first on Dinakaran.

Related Stories: