கேரளா, கர்நாடகா உட்பட 5 மாநிலங்களில் என்ஐஏ சோதனை

புதுடெல்லி: பீகார், கர்நாடகா மற்றும் கேரளா உட்பட 5 மாநிலங்களில் என்ஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.கேரளாவில் மலப்புரம் மாவட்டம் நிலம்பூர், கொண்டாட்டி மற்றும் காசர்கோடு மாவட்டம் மஞ்சேஸ்வரம் ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. பீகாரில் கதிஹார் மாவட்டத்தின் முஜ்ஜாபர் தோலா பகுதியில் வசிக்கும் மகபூப் ஆலம் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அவரது உறவினர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதே போல் கர்நாடகாவில் தக்ஷிண கன்னடா பகுதியில் 16 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையிலும் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதுதவிர ஜார்க்கண்ட்டில் தீவிரவாத நிதி உதவி தொடர்பாக இந்திய மக்களின் விடுதலை முன்னணி அமைப்புடன் தொடர்புடையவர்கள் வீடுகளில் 2வது நாளாக என்ஐஏ மற்றும் போலீசார் நடத்திய சோதனையில் வெடி மருந்து, வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. காஷ்மீரில் புதிதாக உருவான தீவிரவாத அமைப்பு தொடர்பாக 3 இடங்களில் நேற்று சோதனை நடத்தப்பட்டது.

The post கேரளா, கர்நாடகா உட்பட 5 மாநிலங்களில் என்ஐஏ சோதனை appeared first on Dinakaran.

Related Stories: