திருப்பதி அருகே பட்டாசு குடோன் வெடித்து 3 தொழிலாளர்கள் பலி

திருமலை: திருப்பதி அருகே வரதய்யாபாளையத்தில் புறநகரில் வீரய்யா என்பவர் பட்டாசு குடோன் வைத்து நடத்தி வருகிறார். இங்கு உரிமையாளர் உட்பட 5 பேர் பணியாற்றி வருகின்றனர். நேற்று பட்டாசு குடோன் வெடித்து சிதறியது. இதில் குடோனில் பணியாற்றி கொண்டிருந்த தொழிலாளர்கள் கொவ்வகோலி கிராமத்தை சேர்ந்த நாகேந்திரன்(35), சங்கரய்யா (32), கூடுரை சேர்ந்த ஏடுகொண்டலு(40) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்கள். மேலும் குடோன் உரிமையாளர் வீரய்யா மற்றும் கல்யாண் ஆகியோர் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர்.

The post திருப்பதி அருகே பட்டாசு குடோன் வெடித்து 3 தொழிலாளர்கள் பலி appeared first on Dinakaran.

Related Stories: