துாியோதனன் படுகளம் கீழ்செம்பேடு கிராமத்தில்

வந்தவாசி, மே 31: வந்தவாசி அடுத்த கீழ்செம்பேடு கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோயில் துரியோதனன் படுகளத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டர். வந்தவாசி அடுத்த கீழ்செம்பேடு கிராமத்தில் உள்ள அருள்மிகு திரவுபதி அம்மன் கோயில் அக்னி வசந்த விழா நிகழ்ச்சி கடந்த மாதம் 3-ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதனைதொடர்ந்து ஜலக்கிரிடை, அம்மன் பிறப்பு வில் வளைப்பு, அர்ஜுனன் தீர்த்த யாத்திரை, துகில் உரிதல், மாடுபிடி சண்டை, கர்ண மோட்சம், 18 ம் போர் தொடர்ந்து நேற்று படுகளம் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அப்போது துரியோதனன் படுகளம் அமைக்கப்பட்டு அதனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதனை தொடர்ந்து மாலை தீ மிதி விழா நடந்தது. இதில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் எம்.எஸ். தரணிவேந்தன், பொதுக்குழு உறுப்பினர் ஆர்.நந்தகோபால் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கிராம பொதுமக்கள் செய்து இருந்தனர்.

The post துாியோதனன் படுகளம் கீழ்செம்பேடு கிராமத்தில் appeared first on Dinakaran.

Related Stories: