சமையல் மாஸ்டர் கடத்தலா? செய்யாறு அருகே

செய்யாறு, மே 31: செய்யாறு அடுத்த குத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்டாலின்(32), சமையல் மாஸ்டர். இவரது மனைவி சரிதா(31). இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். கடந்த 25ம் தேதி இரவு சமையல் வேலைக்கு செல்வதாக ஸ்டாலின் வீட்டில் கூறி விட்டு சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரை யாராவது கடத்திச்சென்றார்களா என்றும் தெரியவில்லை. இதுகுறித்து நேற்று சரிதா பிரம்மதேசம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் வழக்குப் பதிவு செய்து மாயமான ஸ்டாலினை தேடி வருகிறார்.

The post சமையல் மாஸ்டர் கடத்தலா? செய்யாறு அருகே appeared first on Dinakaran.

Related Stories: