சிசோடியா ஜாமீன் மனு தள்ளுபடி

புதுடெல்லி: டெல்லியில் அமல்படுத்தப்பட்ட புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் கடந்த பிப்ரவரி 26ம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் துணை முதல்வர் சிசோடியா தற்போது வரையில் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் இருந்து வருகிறார். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு சிசோடியா தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி தினேஷ் குமார் சர்மா நேற்று வழங்கிய தீர்ப்பில்,‘‘டெல்லி புதிய மதுபானக் கொள்கை விவகாரத்தில் சிசோடியாவின் மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் மிகத் தீவிரமானவை என்பது மட்டுமில்லாமல் தீர்க்கமானதாகும். அதனால் தற்போது அவருக்கு கண்டிப்பாக ஜாமீன் வழங்க முடியாது’’ என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

The post சிசோடியா ஜாமீன் மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Related Stories: