ஒரு செல்போனுக்காக 42லட்சம் லிட்டர் தண்ணீர் அவுட் அணை தண்ணீரை வெளியேற்றிய அதிகாரிக்கு ரூ.53 ஆயிரம் அபராதம்

போபால்: சட்டீஸ்கரில் அணையில் விழுந்த செல்போனை எடுக்க 42 லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றிய அதிகாரிக்கு ரூ.53 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சட்டீஸ்கர் மாநிலத்தின் கான்கெர் மாவட்டத்தில், கொய்லிபெடா வட்டார உணவுப் பொருள் ஆய்வாளராக இருப்பவர் ராஜேஷ் விஸ்வாஸ். இவர் கடந்த வாரம் கெர்கட்டா-பரல்கோட் நீர்த்தேக்கத்திற்கு சென்ற போது தனது ரூ.1 லட்சம் மதிப்பிலான செல்போனை அணையில் 15 அடி ஆழ நீரில் தவறவிட்டுள்ளார். தொடர்ந்து தனது போனை மீட்க அணையில் இருந்து 42 லட்சம் லிட்டர் நீரை அவர் வெளியேற்றி இருந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தண்ணீரை வெளியேற்ற அனுமதி கொடுத்த நீர்வளத்துறை அதிகாரி திவாருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. தற்போது நீர்வளத்துறை சார்பில் அணை தண்ணீரை வெளியேற்றிய ராஜேஷ் விஸ்வாசுக்கு ரூ.53 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒரு கனஅடிக்கு ரூ.10.50 வீதம் 41 லட்சம் லிட்டருக்கு ரூ.43,092ம், அனுமதி இல்லாமல் தண்ணீர் திறந்ததற்கு ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதை 10 நாளில் கட்ட உத்தரவிடப்பட்டுள்ளது.

The post ஒரு செல்போனுக்காக 42லட்சம் லிட்டர் தண்ணீர் அவுட் அணை தண்ணீரை வெளியேற்றிய அதிகாரிக்கு ரூ.53 ஆயிரம் அபராதம் appeared first on Dinakaran.

Related Stories: