ஒரே ஒரு காங்கிரஸ் எம்எல்ஏவும் மம்தா கட்சியில் இணைந்தார்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள சாகர்திகி சிறுபான்மையினர் நிறைந்த சட்டமன்ற தொகுதியாகும். இங்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பைரோன் பிஸ்வாஸ் எம்எல்ஏ.வாக இருந்தார். இவர், மேற்கு வங்கத்தில் ஆளும் கட்சியான மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுலின் பொது செயலாளர் அபிஷேக் பானர்ஜி நடத்தி வரும் மாபெரும் பேரணி கதார் பகுதியை அடைந்த போது, அவர் முன்னிலையில் திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார். இதன் மூலம், மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இருந்த ஒரே எம்எல்ஏ.வும் கட்சி தாவியதால், காங்கிரஸ் கட்சிக்கு இப்போது அங்கு ஒரு எம்எல்ஏ கூட இல்லை.

The post ஒரே ஒரு காங்கிரஸ் எம்எல்ஏவும் மம்தா கட்சியில் இணைந்தார் appeared first on Dinakaran.

Related Stories: