இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘வன்னிப்பாக்கத்தில் இருந்து 25 ஊராட்சிகளுக்கு ஆழ்துளை கிணறுகள் மூலம் குடிநீர் எடுத்து செல்லப்படுகிறது. இங்குள்ள இறால் பண்ணைகள் அருகில் உள்ள ஆற்றங்கரையின் ஓரத்தில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இறால் பண்ணையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், இந்த கிணற்றுக்குள் புகுந்து தண்ணீர் மாசடைகிறது. இந்த நீரை குடித்த கால்நடைகளும் இறந்துள்ளது. குழந்தைகளுக்கும் உடல் நல குறைவு ஏற்படுகிறது. இதுகுறித்து பொன்னேரி வட்டாட்சியர், சார் ஆட்சியர் ஆகியோரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே கலெக்டர் தலையிட்டு இறால் பண்ணைகளை அகற்றி சுகாதார குடிநீர் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் முதல்வரின் தனிப்பிரிவில் மனு அளித்து போராட்டங்களில் ஈடுபடுவோம்’ என்றனர்.
The post மீஞ்சூர் அருகே இறால் பண்ணையால் நிலத்தடி நீர் மாசு; விவசாயம், குடிநீர் பாதிப்பு: நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் புகார் appeared first on Dinakaran.