பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 2 பேர் பலி

பெஷாவர்: வடமேற்கு பாகிஸ்தானில் தற்கொலை படை நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த 2 பேர் கொல்லப்பட்டனர். வடமேற்கு பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டிய தேரா இஸ்மாயில்கான் மாவட்டம் சஹ்கான் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த தற்கொலை படை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் தெற்கு வஜிரிஸ்தான் நோக்கி சென்று கொண்டிருந்த வாகனத்தில் இருந்த பாதுகாப்பு படையை சேர்ந்த 2 பேர் கொல்லப்பட்டனர்.

காயமடைந்த 19 பேர் பெஷாவரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 3 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்கொலை படை தாக்குதலை தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் சுற்றி வளைக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

The post பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 2 பேர் பலி appeared first on Dinakaran.

Related Stories: