முன்னாள் பிரதமர் நேரு நினைவு நாள்: கார்கே, ராகுல் நேரில் அஞ்சலி

புதுடெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் நேருவின் நினைவு நாள் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதனையொட்டி காங்கிரஸ் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மறைந்த முன்னாள் பிரதமர் நேருவை நினைவு கூர்ந்தனர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் சாந்திவானில் உள்ள அவரது நினைவிடத்திற்கு நேரில் சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

காங்கிரஸ் தலைவர்கள் பலரும் முன்னாள் பிரதமர் நேருவின் நினைவு நாளை நினைவுகூர்ந்தனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது டிவிட்டர் பதிவில், ‘பண்டிட் ஜவஹர்லால் நேருவின் பங்களிப்பு இல்லாமல் 21ம் நூற்றாண்டின் இந்தியாவை கற்பனை செய்து பார்க்க முடியாது’ என்று குறிப்பிட்டு இருந்தார். பிரதமர் மோடி தனது டிவிட்டரில், ‘நமது முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவு தினத்தையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

The post முன்னாள் பிரதமர் நேரு நினைவு நாள்: கார்கே, ராகுல் நேரில் அஞ்சலி appeared first on Dinakaran.

Related Stories: