சிறையை முற்றுகையிட முயன்ற 150 பேர் கைது

வேலூர், மே 27: இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி சிறையை முற்றுகையிட பேரணியாக செல்ல முயன்ற தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் 150 பேர் கைது செய்யப்பட்டனர். இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் வேலூர் சிைறயை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று மாலை வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே அக்கட்சியின் மாநில தலைவர் கே.எம்.சரீப் தலைமையில் பொதுக்கூட்டம் நடந்தது. பொதுக்கூட்டம் முடிந்த நிலையில் அங்கிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட தஜக கட்சியினர் வேலூர் சிறையை நோக்கி செல்ல முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார் சுற்றிவளைத்து 150 பேரை கைது செய்தனர்.

The post சிறையை முற்றுகையிட முயன்ற 150 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: