அறநிலையத்துறை கோயில்களுக்கு சொந்தமான ரூ.55 கோடி சொத்துகள் மீட்பு

சென்னை: இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களுக்கு சொந்தமான சொத்துகளை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. அதன்படி நேற்று ஒரே நாளில் சென்னை, மயிலாப்பூரில் உள்ள பயண்டியம்மன் கோயில் மற்றும் கோவை மாவட்டம் தெலுங்குபாளையம் சென்றாயப்பெருமாள் கோயிலுக்கு சொந்தமான ரூ.55 கோடி மதிப்பீட்டிலான சொத்துகள் மீட்கப்பட்டு கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. இந்நிகழ்வின்போது கோயில்களின் செயல் அலுவலர்கள், தனி வட்டாட்சியர் (ஆலய நிலங்கள்), ஆய்வர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் உடனிருந்தனர்.

The post அறநிலையத்துறை கோயில்களுக்கு சொந்தமான ரூ.55 கோடி சொத்துகள் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: