அந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இருப்பினும், மூச்சுப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டதால், ஒன்பது பேர் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக டேகு தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறினார். மேலும், இந்த விமான கதவு எப்படித் திறந்தது என்பது குறித்து விசாரித்த போது, அவசரக்கால கதவின் அருகே அமர்ந்திருந்த ஒரு பயணி , அந்த கதவின் பிடியைத் தொட்டதால் இச்சம்பவம் நேர்ந்துள்ளதாக ஏர்லைன்ஸ் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. பின்னர், அவசரகால கதவை திறந்தவரை போலீஸ் கைது செய்தது.
The post தென்கொரியாவில் தரையிறங்கும் நேரத்தில் விமானத்தின் கதவை திறந்த பயணி: கைது செய்த போலீஸ் appeared first on Dinakaran.