இதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜி எழும்பூர் நீதிமன்றத்தில் கிருஷ்ணசாமி மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், எனக்கு எதிராக ஆதாரமின்றி கிருஷ்ணசாமி புகார் செய்துள்ளார். அந்த புகாரை கட்சியின் இணையதளத்தில் பதிவேற்றமும் செய்துள்ளார். டிவிட்டர் பக்கத்தில் அவதூறு கருத்துக்களை பதிவு செய்துள்ளார். பத்திரிகைகளுக்கு பேட்டியும் அளித்துள்ளார். உண்மைக்கு புறம்பாக எந்த ஆதாரமும் இல்லாமல் எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறு கருத்துக்களை தெரிவித்துள்ள கிருஷ்ணசாமியை அவதூறு சட்ட பிரிவின்கீழ் தண்டிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
The post புதிய தமிழகம் கிருஷ்ணசாமி மீது அவதூறு வழக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல்: எழும்பூர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை appeared first on Dinakaran.