ஆபத்தான நிலையில் டிரான்ஸ்பார்மர்

குமாரபாளையம், மே 25: குமாரபாளையம் நகராட்சி பேருந்து நிலையம் நுழைவாயில் பகுதியில் சேலம் சாலையோரம் உள்ள டிரான்ஸ்பார்மர் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. சாலையோரம் உள்ள இந்த டிரான்ஸ்பார்மர் விபத்தில் சேதமானால் பெரும் ஆபத்து ஏற்படும். இது குறித்து குமாரபாளையம் மக்கள் நீதி மன்ற நிர்வாகிகள், மின்வாரியத்தில் புகார் செய்தனர். விபத்தால் ஏற்படும் ஆபத்து குறித்து புகாரில் தெரிவித்திருந்தனர். இதையடுத்து பள்ளிபாளையம் மின்வாரிய மண்டல பொறியாளர் கோபால் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர். வாகன போக்குவரத்தால் மின்மாற்றிக்கு ஏற்படும் சேதம் குறித்து அவர்கள் ஆய்வு செய்தனர்.

The post ஆபத்தான நிலையில் டிரான்ஸ்பார்மர் appeared first on Dinakaran.

Related Stories: