ஆனால், சுற்றுலா துறை தூதராக நியமித்து கங்கலியை திரிபுரா பாஜ அரசு கவுரவப்படுத்தியுள்ளது. எனவே, கொல்கத்தா நகரின் ஷெரீப் ஆக கங்குலியை நியமிக்க வேண்டும்’’ என்றார். பாஜ எம்பி திலீப் கோஷ் கூறுகையில்,‘‘கங்குலி போன்ற புகழ்பெற்ற ஒருவர் இருக்கும்போது, பாலிவுட் நடிகர் ஷாருக்கானை மாநிலத்தின் தூதராக திரிணாமுல் அரசு நியமித்தது ஏன்’’ என்று கேள்வி கேட்டார். இந்த குற்றச்சாட்டு குறித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சவுகத்தா ராய் கூறும்போது,‘‘ இந்த விஷயத்தை வேண்டுமென்றே அரசியலாக்குவது தவறு’’ என்றார்.
The post கங்குலிக்கு மம்தா உரிய மரியாதை தரவில்லை: பாஜ குற்றச்சாட்டு appeared first on Dinakaran.