இந்நிலையில், முட்டை, அரிசி, உருளைக்கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட பொருட்களின் விலைவாசி மணிப்பூரில் கடுமையாக உயர்ந்துள்ளது. ரூ.900 ஆக இருந்த 50 கிலோ அரிசி மூட்டை ஒன்றின் விலை ரூ.1800 ஆகவும், ரூ.20 ஆக விற்ற வெங்காயத்தின் விலை ரூ.30 ஆகவும் உருளைக்கிழங்கு கிலோ ரூ.100க்கும் விற்கப்படுகிறது. இதே போல, வழக்கமாக ரூ.180க்கு விற்கப்படும் 30 முட்டைகள் கொண்ட அட்டை ஒன்றின் விலை தற்போது ரூ.300 ஆக உயர்ந்துள்ளது. சமையல் எரிவாயு ரூ.1,800, பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.170 ஆக விற்பனையாகிறது. போராட்டத்தினால் சாலைகள் மூடப்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் இரட்டிப்பாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
The post வன்முறை பாதித்த மணிப்பூரில் தாறுமாறாக எகிறிய விலைவாசி appeared first on Dinakaran.
