பூங்காவில் பராமரிப்பின்றி கிடக்கும் கழிவறைகளை சீரமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

புழல்: மாதவரம் மண்டலம் 24வது வார்டில் உள்ள பூங்கா கழிவறைகளை பராமரிக்க வேண்டும் என, பொதுமக்கள் கோருகின்றனர். மாதவரம் மண்டலம் 24வது வார்டு கங்காதரன் தெருவில் தந்தை பெரியார் சிறுவர் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் புழல் கங்காதரன் தெரு, ஒற்றை வாடை தெரு, லிங்கம் தெரு, கல்யாண் தெரு, பஜனை கோவில் தெரு, காளி தெரு, திருவள்ளுவர் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சிறுவர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் விளையாடி வருகின்றனர். பூங்காவில் உள்ள கழிவறைகள் சரியான முறையில் பராமரிப்பு இல்லாததால் துர்நாற்றம் வீசுகிறது.

சிறுவர்கள் அங்கு சென்று சிறுநீர் மற்றும் மலம் கழிப்பது பெரிதும் சிரமமாக உள்ளது. இதனால் இங்கு விளையாட வரும் சிறுவர்களுக்கு மற்றும் ஓய்வு எடுக்க வரும் பொது மக்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட புழல் 24வது வார்டு மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பயனற்ற நிலையில் உள்ள கழிவறைகளை சுத்தம் செய்து தினசரி தூய்மை பணியாளர்கள் பராமரிப்பு செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புழல் பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post பூங்காவில் பராமரிப்பின்றி கிடக்கும் கழிவறைகளை சீரமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: