இந்தநிலையில், தமிழகத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளில் 2000 ரூபாய் நோட்டுகள் வாடிக்கையாளர்களிடம் வாங்கப்படும். 2000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி திரும்பப் பெறுவதாக அறிவித்த நிலையில் தமிழகத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளில் 2000 ரூபாய் நோட்டுகள் பெறப்படும் என தமிழ்நாடு பெட்ரோல் பங்க் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. அதேசமயம் பெட்ரோல் பங்குகளில் சில்லறை தட்டுப்பாடுகள் ஏற்படாமல் இருக்க வங்கிகள் தடையின்றி 2000 ரூபாய் நோட்டிற்கான தகுந்த சில்லறைகளை வழங்கி உதவிட வேண்டும் என தமிழ்நாடு பெட்ரோல் பங்க் உரிமையாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
The post தமிழகத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளில் ரூ.2000 நோட்டுகள் வாடிக்கையாளர்களிடம் வாங்கப்படும் என அறிவிப்பு appeared first on Dinakaran.
