திரவுபதி அம்மன் ேகாயில் சித்திரை தீமிதி திருவிழா பாடாலூர் அருகே கொளக்காநத்தத்தில் பெண்களுக்கு கருத்தடை சிகிச்சை முகாம்

 

பாடாலூர், மே22:ஆலத்தூர் தாலுகா கொளக்காநத்தம் கிராமத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தகுதி வாய்ந்த பெண்களுக்கு கருத்தடை முகாம் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்ட துணை இயக்குநர் மாவட்ட குடும்ப நல செயலகம் மற்றும் கொளக்காநத்தம் கிராமத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மார்ச், ஏப்ரல், மே ஆகிய மூன்று மாதங்களிலும் வாரத்தில் ஒரு நாள் நிரந்தர குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை முகாம் நடைபெறுகிறது.

ஆலத்தூர் வட்டாரத்திற்கு உட்பட்ட தகுதி வாய்ந்த தாய்மார்களுக்கு கருத்தடை முகாமில் கலந்து கொண்டு நவீன கருத்தடை செய்து தாய்மார்களுக்கு அரசினால் வழங்கப்பட்டு வரும் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. மேலும் கொளக்காநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூலமாக நினைவு பரிசு வழங்கி ஊக்குவிக்கின்றனர். நிகழ்வில் மருத்துவர் கரோலின் நிசியா, கிராம சுகாதார செவிலியர் செல்லம்மாள், செவிலியர் ஹேமா, சுகாதார ஆய்வாளர் ஜெகநாதன் மற்றும் மருத்துவ குழுவினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

The post திரவுபதி அம்மன் ேகாயில் சித்திரை தீமிதி திருவிழா பாடாலூர் அருகே கொளக்காநத்தத்தில் பெண்களுக்கு கருத்தடை சிகிச்சை முகாம் appeared first on Dinakaran.

Related Stories: