சூலூரில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது

 

சூலூர், மே 22: சூலூரில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை சூலூர் காடம்பாடி பகுதியை சேர்ந்தவர் குமரேசன். இவர் நேற்று தனது ஊருக்கு செல்வதற்காக சூலூர் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது அவரை அணுகிய கார்த்திகேயன் என்பவர் தன்னிடம் அழகிகள் உள்ளதாகவும், வந்தால் உல்லாசமாக இருக்கலாம் எனவும் கூறியுள்ளார். மேலும் செல்போன் எண் மற்றும் வாட்சப் போட்டோக்களை காண்பித்து உங்களுக்கு எந்த அழகி வேண்டுமோ தேர்ந்தெடுத்து கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து குமரேசன் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அப்பகுதியில் உள்ள பங்களாவில் சோதனை நடத்தினர். அங்கு திருப்பூர் மன்னரையை சேர்ந்த பானு பிரியா (34), மேகலா (34) ஆகியோரும், அவர்களுடன் சிவகாசியை சேர்ந்த கார்த்திகேயன் என்ற புரோக்கரும் இருந்துள்ளார். மாறுவேடத்தில் சென்ற போலீசாரை அடையாளம் தெரியாமல், அவர்களிடம் அழகிகளை காட்டி பேரம் பேசி உள்ளனர். அப்போது போலீசார் வீட்டுக்குள் புகுந்து, விபச்சாரத்தில் ஈடுபட்டதாக பானு பிரியா, மேகலா மற்றும் கார்த்திகேயன் ஆகியோரை கைது செய்தனர்.

The post சூலூரில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: