இதில் நகர செயலாளர் கே.குமார் பேசுகையில், ‘’பல ஆண்டுகளாக வாரசந்தை மருத்துவமனை சாலையில் இடவசதி இன்றி செயல்பட்டுவந்தது. இந்த சந்தைக்கு மாற்றிடம் ஒதுக்கப்பட்டு அங்கு வார சந்தை தொடங்கப்பட உள்ளது. மதுராந்தகம் பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு அங்கு அரசு கலைக் கல்லூரி கட்டப்படவுள்ளது. புறவழி சாலை பேருந்துநிறுத்தத்தில் நிழற்குடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மதுராந்தகம் நகரில் திராவிடம் மாடல் ஆட்சியால் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது’ என்றார்.
தலைமைக்கழக பேச்சாளர் நாத்திகம் நாகராஜன் பேசுகையில், ‘’பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், புதுமைப் பெண் திட்டத்தில் கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு ரூபாய் ஆயிரம் ஊக்க தொகை, பள்ளி சிறுவர்களுக்கு சிற்றுண்டி, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் தள்ளுபடி உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்’’
என்றார்.
இந்த கூட்டத்தில், ஓட்டுனர் அணி துணை அமைப்பாளர் காமராஜ், நகரமன்ற துணைத் தலைவர் சிவலிங்கம், நகர கழக நிர்வாகிகள் கேசவன், பரணி, மூர்த்தி, கோமதி, கிருஷ்ணன், சங்கர், ராஜா, ஏழுமலை, குருமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். நகர இளைஞரணி துணை அமைப்பாளர் நவீன் நன்றி கூறினார்.
The post மதுராந்தகம் நகர திமுக இளைஞரணி சார்பில் திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு சாதனை கூட்டம் appeared first on Dinakaran.