இந்த சம்பவத்திற்கு பின்னர் ஜூபிக்கு ஷினோ அடிக்கடி கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளார். இதனால் ஜூபி தனது 2 குழந்தைகளுடன் மணற்காட்டில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் அனைவரும் வெளியே சென்றிருந்த நேரத்தில் ஜூபி வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஷினோ மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் போலீசார் விசாரணைக்கு பயந்து ஷினோ அவருடைய வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். போலீசார் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரிடம் விசாரணை நடத்தினால் தான் ஜூபியை ஷினோ கொலை செய்தாரா? அல்லது வேறு யாரும் கொலை செய்தார்களா? என்ற உண்மை தெரியவரும்.
The post கேரளாவில் மனைவிகளை மாற்றும் கும்பல் மீது புகார் கொடுத்த பெண் கொலை கணவர் தற்கொலை முயற்சி appeared first on Dinakaran.