இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் மற்றும் உயிர்சேதங்கள் தொடர்பான தகவல்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் நடந்து வருகிறது.
இதனிடையே தெற்கு பசிபிக் பகுதியில் 26 இடங்களில் கடல் மட்டத்திலிருந்து 1 மீட்டர் உயரம் வரை அலைகள் எழும் சாத்தியம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, தற்போது பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் (PTWC) வெள்ளிக்கிழமை பிற்பகலில் சுனாமி அச்சுறுத்தல் பெரும்பாலும் கடந்துவிட்டதாகக் கூறியுள்ளது.வனுவாட்டு வானிலை ஆய்வு மற்றும் புவி-அபாயங்கள் துறையின் இணையதளத்தின்படி, மக்கள் உயரமான இடங்களுக்கு செல்லும்படி கேட்டுக்கொண்ட எச்சரிக்கையை அந்நாட்டு அரசு திரும்பப் பெற்றுள்ளது.
The post பிஜி, வானாட்டு, நியூ கேலடோனியாவில் 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை விடுப்பு!! appeared first on Dinakaran.