மயிலாடுதுறை அருகே நாட்டு வெடிகுண்டு தயாரித்த ரவுடி வீட்டில் போலீஸ் சோதனை: 2 வெடிகுண்டுகள் செயலிழப்பு, 30 வெடிகள் வெடிக்க வைத்து அழிப்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே பண்டாரவாடை கிராமத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்த சம்பவத்தின் தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி 2 வெடிகுண்டுகளை செயலிழக்க செய்தனர். மயிலாடுதுறை அருகே பண்டாரவாடை என்ற கிராமத்தில் ரவுடி கலைவாணன் என்பவர் நாட்டி வெடிகுண்டு தயாரித்த போது ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் அவரது இரு கைகளிலும் விரல்கள் முற்றிலும் செந்தாமடைந்தது. இதையடுத்து அவர் தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து வெடிகுண்டு வெடித்த வீட்டை காவல் துறையினர் சீல் வைத்து தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து மோப்ப நாய் உதவியுடன் காவல் துறையினர் நடத்திய சோதனையில் வெடிக்காத 2 வெடிகுண்டுகள் மற்றும் குண்டு தயாரிக்க தேவையான மூலப்பொருட்கள், வெடி மருந்துகள் ஆகியவை வீட்டின் உட்புறம் மற்றும் கொல்லைப்புறத்தில் இருந்து கைப்பற்றப்பட்டன. வெடிகுண்டு தயாரிப்புக்காக வைக்கப்பட்டு இருந்த 30 நாட்டு வெடிகளை வெடிக்க வைத்து அளித்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

The post மயிலாடுதுறை அருகே நாட்டு வெடிகுண்டு தயாரித்த ரவுடி வீட்டில் போலீஸ் சோதனை: 2 வெடிகுண்டுகள் செயலிழப்பு, 30 வெடிகள் வெடிக்க வைத்து அழிப்பு appeared first on Dinakaran.

Related Stories: